districts

img

கட்டிடம் விழுந்து பெண் பலியான சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை: சிபிஎம்

சென்னை, ஜன. 28 - கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னை அண்ணா சாலை, ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே பழைய கட்டிடம் ஒன்று பாதுகாப்பின்றி வெள்ளி யன்று (ஜன.27) இடிக்கப் பட்டு வந்தது. கட்டிடத்தை உட்புறமிருந்து இடித்துக் கொண்டு இருந்த போது, அந்த வழியே சென்ற 3 பேர் மீது கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில், சென்னையில் பணியாற்றும் மதுரையை சேர்ந்த பத்ம பிரியா (வயது22)  என்ற தனியார் நிறுவன  ஊழியர் உயிரிழந்தார்.  அவருடன் வந்த நண்பர் ஒருவர் படு காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புல்டோசர் உரி மையாளர் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். கட்டிட உரிமையாளர், பொறி யாளர், ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்துள்ள னர். இந்த விபத்து குறித்து, கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணமான மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிய கோரி சனிக்கிழமையன்று (ஜன.28)  விபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி 13ந் தேதி அனுமதி வழங்கியது. விதிமுறைப்படி கட்டிடம் இடிக்கப்படுகிறதா? என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.

இந்த அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததற்கு மாநகராட்சிதான் பொறுப்பு.மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதி காரிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். “ஒரு உயிரிழப்பிற்கு பிறகே, சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் தகர சீட் அடித்துள்ளது சரியா. இதை முன்கூட்டியே அதிகாரிகள் செய்திருக்க வேண்டாமா? புளியந்தோப்பில் சாலை அமைக்கும் பணிக் காக இரவில் தடுப்பு அமைத் துள்ளனர். அதை அகற்றா மல் சென்றதால் ஆட்டோ ஓட்டுநர் மோதி விபத்துக் குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். நகரில் பாது காப்பான சாலைகளை மாநகராட்சி  உருவாக்கி தர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் வி.தனலட்சுமி, வே.ஆறு முகம், ஆயிரம்விளக்கு பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், சிவா, வெங்கடேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைது கட்டிட இடிப்பு பணிகளை செய்த ஜேசி பியின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி டிரைவர் பாலாஜி என இருவரை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேனை சனிக்கிழ மையன்று (ஜன.28) கைது செய்துள்ளனர். கட்டிடத்தின் உரிமை யாளர் சையதுஅலி ஃபாத்திமா, பழைய கட்டி டங்களை இடிப்பதற்கான பொறியாளர் ஷேக் பாய் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தம் எடுத்த அப்துல் ரகுமான் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர்.