districts

img

ராணிப்பேட்டையில் பகத்சிங் நினைவு கேரம் போட்டி

ராணிப்பேட்டை, மார்ச் 22- மாவீரன் பகத்சிங் நினைவு நாளை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராணிப்பேட்டையில் கேரம் போட்டி நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் இரா.ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.கோவலன் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.அறி  வழகன் பரிசும், சான்றும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டப் பொரு ளாளர் அ.கலைவாணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். ஜெபராஜ், கார்த்திக், மருத்துவர் எஸ்.பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எ.பி.எம்.சீனிவாசன், கட்டு  மான சங்க பொதுச் செயலாளர் த.ஞான முருகன், தமுஎகச மாவட்டத் தலைவர் அந்திக்காற்று பாலு, ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட துணைச் செய  லாளர் கே.ஏகாம்பரம், டிஆர்இயூ கிளைச் செயலாளர் டி.சீனிவாசன், சி.முத்து  கிருஷ்ணன், கே.சிவராத்திரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

;