districts

பொதுத்துறை வங்கிகளில் 3,049 காலிப் பணியிடங்கள் ஆக. 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 17-

     இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொ பேஷனரி அதிகாரி, மேனேஜ் மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) அறிவித்துள்ளது.

    பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபே ஷனரி அதிகாரி, மேனேஜ் மென்ட் பயிற்சியாளர் காலிப்  பணியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு கள் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் ரூ850 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த லாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.175 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

    கல்வி தகுதி 21.8.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண் டும். மாதச் சம்பளம் ரூ41,960, வயது வரம்பு, 1.8.2023  தேதியின்படி, 21 முதல்  30க்குள் இருக்க வேண்டும்.  தகுதியான விண்ணப் பதாரர்கள் https://www.ibps.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆகஸ்ட் .21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முதல்நிலைத் தேர்வு மையங்கள்

     தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராம நாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல் வேலி, வேலூர், விருதுநகர்.  மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்த னைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.