அம்பத்தூர், நவ. 4- ஆவடி அடுத்த திருநின்றவூர், கன்னடபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (65). இவர் ஓய்வு பெற்ற மாநகர போக்கு வரத்துக் கழக ஊழியர். இவர் திருநின்றவூரில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார் இவர் திருநின்றவூர் காந்தி சிலை அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கி விட்டு, பணப்பையை இருசக்கர வாகனத்தில் தொங்க விட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் அந்த பணப்பையை பறித்துக் கொண்டு, அங்கு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி விட்டார். இதுகுறித்து சுதாகர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.