districts

img

பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்துக செங்கல்பட்டு பகுதி மாநாடு வலியுறுத்தல்

செங்கல்பட்டு, அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செங்கல்பட்டு பகுதி 11வது மாநாடு வேண்பாக்கம் தோழர் வேதகிரி நினைவரங்கில் அக்.13 அன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை பகுதிக் குழு உறுப்பினர் எம்.ரவி ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் என்.அன்பு வாசித்தார். பகுதிக்குழு உறுப்பினர் ஜி.ஜெயந்தி வரவேற்றுப்பேசினார். மாநாட்டை துவக்கிவைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்பேசினார். வேலை அறிக்கையை பகுதி செயலாளர் கே.வேலனும் வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் எம். கலைச்செல்வியும் தாக்கல் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாநாட்டை முடித்து வைத்து மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா பேசினார். பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.சதிஷ் நன்றி கூறினார். பகுதிக்குழு 9 பேர் கொண்ட புதிய பகுதி குழுவிற்கு கே. வேலன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  தீர்மானங்கள் செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடை   திட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும்,செங்கல்பட்டு இராட்டின கிணறு அருகே திருகழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை முடித்து உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றபட்டன.