திருவள்ளூர், டிச.30- மீஞ்சூர் அருகில் கொண் டக்கரை கிராமத்தில் உள்ளது ஜெர்மன் எக்ஸ் பிரஸ் ஷிப்பிங் ஏஜன்ஸி இந்தியா என்ற தனியார் நிறுவனம். இதில் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கம்பெனி நிதி நெருக்கடி யில் இருப்பதால் ஊழியர் அனைவருக்கும் செட்டில் மெண்ட் கொடுக்கப்போவ தாக தெரிவித்து டிச.18 அன்று ஒரு கடிதம் வெளி யிட்டது . ஒரு தொழிற்சாலை மூடுவதாக இருந்தால் முறை யாக அரசின் அனுமதி பெற்ற பின்பே மூட வேண்டும் என்றவிதி பின்பற்றப்பட வில்லை. தொழிற்தாவா சட்டம் 1947 பிரிவு 25 (எப்)ன் படி பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் எதை யும் பின்பற்றாமல் தன்னிச் சையாக கம்பெனி மூடுவது என்ற அறிவிப்பானது சட்ட விரோத கதவடைப்பாகும். அதை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக சட்டவிரோத கதவடைப்பு நீக்கி கம்பெனி திறக்கப்பட்டு அனை வருக்கும் வேலை அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அனு மதி பெறாமல் கம்பெனியை மூடும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத கதவடைப்பை நீக்கி அனை வருக்கும் வேலை கொடுக்க தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆலை முன்பு சனிக்கிழமையன்று (டிச 30), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் கே.விஜயன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட இணைச் செய லாளர் எஸ்.நரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், இ.ெஜய வேலு, வழக்கறிஞர் கனக சபை, கோபி.நாயனார் ஆகி யோர் பேசினர்.