districts

சென்னை முக்கிய செய்திகள்

பள்ளிகளில் பாடம் எடுக்கப்போகும் ஐஐடி பட்டதாரிகள்

சென்னை, ஆக. 30- ஆர்க்கிட்ஸ், நாடெங்கி லும் உள்ள அதன் பள்ளி களில் ஐஐடியில் கற்றுத் தேறிய பட்டதாரிகளை பணியில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் இயற்பி யல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்க ளுக்கான தனது ஆர்க்கிட்ஸ் கரியர் ஃபவுண்டேஷன் செயல்திட்டத்தை விரி வாக்குவதற்கு ஆசிரியர்க ளாக செயல்பட சுமார் 200 ஐஐடி பட்டதாரிகளை சமீ பத்தில் பணிக்கு தேர்வு செய்துள்ளது.   ஐஐடி கான்பூர், ஐஐடி மண்டி, ஐஐடி புவனேஷ்வர் போன்ற முன்னணி ஐஐடி உயர்கல்வி நிறுவனங்க ளின் முன்னாள் மாண வர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐஐடி யில் கல்வி பயின்ற இந்த ஆசிரியர்கள், மேற்குறிப்பிடப் பட்ட பாடங்களை மாண வர்களுக்கு கற்பிப்பார்கள் என்று ஆர்க்கிட்ஸ் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பேக் கடையில்  தீ விபத்து

சென்னை, ஆக. 30- சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் அடுத்த திரு முல்லைவாயல் இந்தியன் வங்கி அருகே கார்த்திக் என்பவர் ஏகேஎம் பேக் வேல்ர்ட் என்ற பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பைகள், காலணிகள் உள்ளிட்ட வற்றை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் வெள்ளிக் கிழமை அதிகாலையில் அந்த கடையில் இருந்து கரும்புகை வெளியேறி யுள்ளது. சிறிது நேரத்தில் கடையில் இருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதனால் அந்த பகுதி கரும்புகையாக காட்சி யளித்தது. இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கும், தீ அணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து திரு முல்லைவாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் பந்தயம்: போக்குவரத்து மாற்றம் 

சென்னை, ஆக,30- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் சனிக்கிழமை(ஆக.31) மற்றும் செப்.1 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடை பெறவுள்ளது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.  இதன் காரணமாக இந்த சாலைகளில் போட்டி நடைபெறும் நாளன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.மாற்றுப்பாதையில் போக்கு வரத்து அனுமதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறி வித்துள்ளது.

வடலூர் சத்திய ஞான சபை  நிலங்களை மீட்க குழு அமைப்பு

கடலூர்,ஆக.30- வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய  ஞான சபையின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  நிலங்களை மீட்க குழு அமைக்கப் பட்டுள்ளது. பார்வதிபுரம் பகுதி மக்கள் சத்திய ஞான சபை அமைக்க 106.4 ஏக்கர் நிலத்தை தானமாக வள்ளலாருக்கு கொடுத்தனர். இந்த நிலத்தில் தற்பொழுது 26 ஏக்கர் நிலம்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க  கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்புகளை கண்டறிய குழு  அமைத்து உத்தரவிட்டுள்ளார். கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் உள்ளிட்ட 5 பேர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையை சேர்ந்த 5 பேர் என 10 பேர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர். இவர்கள் வள்ளலார் நிறுவிய சத்திய  ஞான சபைக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை  கண்டறிந்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த  அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிய வருகிறது.

வேலூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர், ஆக 30 - வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  ஆக 31 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி  வரை வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 75க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10, 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் நுட்ப கல்வி, செவிலியர், பார்மசி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லெட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தலைவர், துணைத் தலைவர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடு!  காசோலை அதிகாரத்தை ரத்து செய்தார் ஆட்சியர்

வேலூர், ஆக. 30 - சீவூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரது காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவூர் ஊராட்சி மன்றம் 12வார்டுகள் கொண்டது இந்த ஊராட்சி.  இதில் ஊராட்சியின் தலைவராக தேமுதிகவை சேர்ந்த உமாபதி என்பவரும்  துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த அஜீஸ் என்பவரும் இருந்து வந்தனர்.  இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கியது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர் புகார்கள் வந்ததையடுத்து சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி மற்றும் துணைத் தலைவர் அஜீஸ் ஆகிய இருவரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்தார். சீவூர் ஊராட்சி மக்களின் நலன் கருதி பஞ்சாயத்தின் அடிப்படை அத்தியாவசிய நிர்வாகப் பணிகளுக்காக பஞ்சாயத்து வங்கி கணக்குகளை கையாள குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (திட்டம்)  அதிகாரமளித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

பெசன்ட்நகருக்கு 100 சிறப்பு பேருந்துகள்

சென்னை,ஆக.30- சென்னை பெசன்ட் நகர் வேளாங் கண்ணி ஆலய ஆண்டு திருவிழா கடந்த வியாழனன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பொது மக்கள் இந்த விழாவில் பங்கேற்க வரு வார்கள். இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்க ளுக்கு மேலும் பொதுமக்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திரு விழாவில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.