districts

img

தரமணியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஞாயிறன்று (மார்ச் 31) தரமணியில் 8வது ஆண்டாக இப்தார் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நலக்குழுவின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வியாளர் தாவூத் மியான்கான் பேசினார். அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பொருளாளர் ஒஸ்.இஸ்மாயில், தென்சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆண்டனி, மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதித் தலைவர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் ஏ.அந்தோணி பெர்னாண்டஸ், குருஜி சந்தோஷ், மௌலவி அ.அப்துல் ஸமது, அருட்தந்தை மரிய அருள் ராஜா உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.