districts

மாஞ்சா நூல் விற்றால் குண்டர் சட்டம்

சென்னை, ஜூலை 11- சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். சென்னை மாநகர காவல் எல்லையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல்  தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நபர்களை  கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டங்கள் வாரி யாக ஏற்கனவே அமைக் கப்பட்ட தனிப்படையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சில இடங்க ளில் மாஞ்சா  நூல்கள் மூலம் அபயகரமான வகையில் பட்டம் விடப்படுகிறது.  இதையடுத்து சென்னை மாநகர காவல் எல்லையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்ய சனிக் கிழமை முதல் வரும் செப்டர் பர் 6ம் தேதி வரை, தடை  விதித்து உத்தரவிட்டுள்ளார்.

;