districts

சென்னை முக்கிய செய்திகள்

தனி மனிதரை நம்பி நாடு சென்றால் எல்லாம் சீரழியும்!

பெரம்பூரில்  டி.கே.ரங்கராஜன் சாடல்

சென்னை, ஏப். 14- மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் பெரம்பூரில்  நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால பாஜக வின் வேதனை அவர்கள் வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதில் 80 கோடி மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவ தாக தெரிவித்துள்ளனர். அப்படி யென்றால் 80 கோடி மக்கள் ரேசன் கடையை நம்பித்தான் வாழ்கி றார்கள். அப்படியென்றால், மக்க ளின் வாங்கும் சக்தி பொது விநி யோகத்தை நம்பித்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்களால் எதுவும் வாங்க முடிய வில்லை. 42 விழுக்காடு பட்ட தாரிகள் வேலையில்லாமல் இருக் கிறார்கள். படித்த கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு உரு வாக்கப்படவில்லை. பொரு ளாதார துறைகளில் நாசகர மான விளைவுகளை ஏற்படுத்தி யிருக்கிறது. பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் பொரு ளாதாரக் கொள்கை சாமானிய மக்களுக்கு, கிராமப்புற விவ சாயிகளுக்கு பலன் அளிக்க வில்லை. பீகார், பஞ்சாப், உத்தர பிரதேச மாநில விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் விளைச்சலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சாமானிய மக்கள் வாழ முடியவில்லை. ஒரே தேர்தல், ஒரு கட்சி ஆட்சி என அறிவிக்கிறார்கள். அப்படி யென்றால் இனி தேர்தல் இல்லை என்ற நிலைக்கு போவார்கள். ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது இன்று முக்கிய அம்சமாக நம்முன் உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உரு வாக்கியிருக்கிறார்கள். இந்தியா குடியரசாக மாறிய பிறகுதான் அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்கி றோம். நாட்டில் ஜனநாயகம் பாது காக்கப்பட வேண்டும் என்றால், பொருளாதார சமத்துவம் அனை வருக்கும் தேவை. பொருளாதார சமத்துவத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். தனி மனிதரை நம்பி இந்த நாடு சென்றால், இந்த நாடு சீரழிந்து போய் விடும் என அம்பேத்கர் கூறினார். தற்போது தனிநபர் வழிபாடு அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சி என்று கூறுவதை விட மோடி, மோடி.. என்று கத்துவது, ஒரு மோடியினால்தான் 140 கோடி மக்களையும் வாழ வைக்க முடியும் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அவக்கேடு. எனவே அரசியலமைப்புச் சட்டத்தை, பன்முகத்தன்மையை, மாநில உரிமையை பாதுகாக்க கலாநிதி வீராசாமியை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் திமுக பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடி தடைக்காலம்  தொடங்கியது
சென்னை, ஏப். 14- தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல்15 முதல் ஜூன் 14 ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபர் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவர்கள் ஈடுபடுவர். சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும். மீன்பிடித் தடைக்காலம் திங்களன்று தொடங்கியுள்ளதால் மீன்களை வாங்க கடற்கரைக்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் சென்னை காசிமேட்டில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர். வஞ்சிரம் ரூ.1,500, வவ்வால் மீன் ரூ.900, சங்கரா ரூ.600, தேங்காய் பாறை ரூ.850, இறால் ரூ.500 க்கும் விற்பனை ஆனது.

தபால் வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு  இன்று வாய்ப்பு 

சென்னை,ஏப்.14- தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத்  தேர்தல்  நடைபெற உள்ளது.   இதனையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகு திகளுக்குட்பட்ட 16 சட்ட மன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் பணி புரிய நியமிக்கப்பட்ட, தபால் வாக்கு செலுத்தாத வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு திங்களன்று (ஏப்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாவட்ட மூன்று தொகுதிகளுக்குட் பட்ட (தென் சென்னை, வட சென்னை,மத்திய சென்னை) 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள சிறப்பு  வாக்குச்சாவடி மையங்க ளில் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.  எனவே தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர் கள் மேற்கூறிய பயிற்சி நடைபெற்ற 16 மையங்க ளுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை யுடன் சென்று வாக்களிக் கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண் டுள்ளார்.

தங்கம் விலை ரூ.600 அதிகரிப்பு

சென்னை, ஏப்.14- தங்கம் விலை கடந்த ஒரு வருட காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவர னுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,840க்கும், ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.6,855 க்கும் விற்பனை செய்யப் பட்டது.