கடலூர், மே 8- ஆல்பேட்டையில் சாலை ஓரம் இருந்த மரம் விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. கடலூர் ஆல்பேட்டை பகுதி யில் மினி பாலம் கட்டுமானப் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறுகிறது. அதே போல் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியும் மாநகராட்சி சார்பில் நடைபெகிறது. இதற்கிடையில் தூங்குமூஞ்சி மரம் ஒன்று உள்ளது. இந்த கட்டுமான பணிக்காக அந்த மரத்தின் வேர்களை ஏற்கனவே வெட்டி விட்டனர். இந்நிலையில் அந்த மரம் அருகில் இருந்த இரண்டு ஓட்டு வீடுகளின் மேல் திங்கட்கிழமை விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளின் மேல் கூரை முழுவதும் சேத மடைந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள உயிரழுத்த மின் கம்பம் உள்ளிட்ட 5 மின் கம்பங்களும் உடைந்தன. இதையடுத்து வீட்டின் உரி மையாளர்கள் சேதமடைந்த குடியிருப்பை சீரமைத்து தர வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மரத்தை அகற்றுவதற்கும், மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.