கள்ளக்குறிச்சி, ஆக.4- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் ஒன்றியம், நாகலூரில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.56.47 கோடியில் மாதிரிப் பள்ளி மற்றும் மாண வர்களுக்கு புதிதாக விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சி யர் கூறுகையில், “ மாதிரிப் பள்ளி கட்டி டம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.19.33 கோடி யிலும், மாதிரிப் பள்ளி மாணவர் விடுதி கட்டிடம், ரூ. 18.57 கோடியிலும், மாதிரிப் பள்ளி மாணவியர் விடுதி கட்டிடம் ரூ.18.57 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரு கிறது. இதில் மாதிரிப் பள்ளி மாணவிர் விடுதிக் கட்டிடம் 6,800 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது”என்றார். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.70 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 15 வகுப்பறை மற்றும் 2 ஆய்வகங்களுடன கூடிய கூடுதல் பள்ளிக்கட்டிட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆட்சியர் மாதிரிப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.