கிருஷ்ணகிரி, ஜூலை 6- 13 வது ஓசூர் புத்தகத் திருவிழா ஜூலை 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பதாகை வெளியீட்டுடன் புத்தகத் திருவிழா பணிகள் துவங்கியது. இதுகுறித்து வாகன பிரச்சாரம் ஓசூர் வட்டத்தில் நடந்து வருகிறது. மூன்றாம் நாளாக தர்கா ஹவுசிங் காலனி, அரசனட்டி, மூக்கண்டப்பள்ளி,எம்எம் நகர், ஜூஜூவாடி பகுதிகளில் புத்தகத் திருவிழா விளம்பர குழுவினர் விக்னேஷ் தலைமை யில் ஜூலியட் கிறிஸ்டினா, கிஷோர்,காந்தி பிரச்சாரம் செய்தனர்.