மருத்துவமனையில் வைகோ அனுமதி
சென்னை, நவ. 14- சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ வியாழனன்று அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த மே மாதம், வீட்டில் வழுக்கி விழுந்ததில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தோள்பட்டையில் எலும்பு கூடிய தால், அறுவைசிகிச்சை செய்து வலது கை தோள் பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் காவலரை தாக்கிய டாஸ்மாக் ஊழியர் கைது
சென்னை, நவ. 14- வேளச்சேரி எம்ஜிஆர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் போக்குவரத்து காவலர். புதனன்று மாலை ஆற்காடு சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள போலீஸ் பூத் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் பெண்ணின் குழந்தையை பார்த்து போதையில் இருந்த நபர் ஆபாசமாக பேசி உள்ளார். இதுகுறித்து பெண் காவலரிடம் சிறுமி புகார் தெரிவித்துள்ளார். உடனே பெண் காவலர் அந்த நபரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் பெண் காவலரை தாக்கியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் காவலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும் டாஸ்மாக் கடையில் பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் 170 வீடுகளை அகற்ற முடிவு
சென்னை, நவ.14- பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. குறிப்பாக ஏரி, குளம், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசிக்கும் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்கியும், ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது, காவல்துறை, மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆக்கிர மிப்பு பகுதிகளில் உள்ளவர்களை அகற்ற முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் முதற்கட்டமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள 170 வீடுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: பள்ளிக்கரணை பகுதியில் 1,085 ஆக்கிரமிப்பு இடங்கள் இருப்பதாக பையோ மெட்ரிக் கணக்கெடுப்பு மூலமாக கண்டறிந்தோம். அதன்படி, முதற்கட்டமாக டாக்டர் அம்பேத்கர் நகரில் 102 வீடுகளும், மகாலட்சுமி நகரில் 70 வீடுகளும் ஆக்கிரமித்துள்ளதை அடையாளம் கண்டு இந்த குடியிருப்புவாசிகளுக்கு இம்மாதம் இறுதிக்குள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மேலும் இவர்களுக்கு செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு இடம்பெயர ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,நவ.14- தேர்தல்களின் போது வாக்குச்சாவடி களாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்த லுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர் பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று மாநில தேர்தல் ஆணை யம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் குறித்த வழக்குகளின் விவரம் என்ன? சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை ,நவ.14- சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் என்ன? என்று விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அக்.4-ல் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், பச்சை யப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப் பட்டார்.தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சுந்தர் அக்.6-ல் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்க ளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட வர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமின் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதி பதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர். அப்போது காவல்துறை தரப்பில், கைதான மாணவர்கள் ஒரு பருவத்திற்கு 10க்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மாணவர் களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கைதான மாணவர்கள் தரப்பு தெரிவித் துள்ளது. இதற்கு நீதிபதி, “கொலையாளி குறித்து கவலைப்படுவோர்,கொலையான மாணவர் குடும்பம் பற்றி ஏன் கவலைப் படவில்லை?. வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க நிச்சயம் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னையில் கடந்த 10 ஆண்டு களில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் என்ன?. காவல்துறை, ரயில்வே போலீஸ் பதிவு செய்த வழக்குகள், அவற்றின் நிலை, சமரசமானவை பற்றிய விவரம் தர ஆணையிடுகிறோம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
சென்னை மாநகராட்சியில் மீட்பு பணிக்கு 18,500 தன்னார்வலர்கள் பெயர் பதிவு
சென்னை, நவ. 14- சென்னை மாநகராட்சியில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வெள்ள மீட்பு பணிக்காக 22 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ள னர். இதற்காக 103 படகுகள் மற்றும் 426 மோட்டாருடன் கூடிய டிராக்டர்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலை யில், சென்னையில் புதனன்று பல்வேறு இடங்களில் அமைச்சர் ஆய்வு செய்தார். அந்த வகையில் ஓட்டேரி நல்லான் கால்வாய், அம்பேத்கர் பாலம், பேசின் பிரிட்ஜ், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுரு பன், வடசென்னை எம்பி கலாநிதி வீரா சாமி, தாயகம் கவி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் பலர் சென்றனர். பின்னர் ஓட்டேரியில் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய அளவிற்கு சென்னை மாநகராட்சி அனைத்து நிலை யிலும் தயாராக உள்ளது. சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு மழை நேரங்களில் உணவு வழங்க 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை மீட்டு நிவாரண மையத்தில் தங்க வைப்ப தற்காக 103 படகுகள் தயார் நிலை யில் உள்ளன. இதில் 36 படகுகள் சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப் பட்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. சுரங்கப்பாதைகள் கணேசபுரம் சுரங்கப்பாதையை தவிர்த்து சென்னையில் இருக்கக் கூடிய அத்தனை சுரங்க பாதைகளிலும் இயல்பான போக்குவரத்து உள்ளது. 100 எச்.பி மோட்டார்கள் 134 தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி அலுவலர் கள், பணியாளர்கள், தூய்மைப்பணி யாளர்கள் என 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு பணிக்காக தயார் நிலை யில் உள்ளனர். 18,500 தன்னார் வலர்கள் மழையில் பணியாற்ற பதிவு செய்துள்ளனர். நல்லா கால்வாய் ஓட்டேரி நல்லா கால்வாயில் ஆயிரம் டன் மணல் அகற்றப்பட் டுள்ளது. மீதம் 10 டன் முதல் 15 ஆயிரம் டன் வரை உள்ள மண்ணை அகற்ற வேண்டும். 10 கிமீ வரை மணலை அகற்ற வேண்டும். விருகம் பாக்கம் கால்வாயிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது, அதுவும் முடிந்துவிடும். மக்களுக்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. சென்னை முழுக்க கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.