districts

img

வீடு, மனை கண்காட்சி  சென்னையில் தொடங்கியது  

சென்னை, பிப்.17–  கிரெடாய் சென்னை சார்பில் நடத்தப்படும்  தென்னிந்தியாவின் பிரமாண்ட வீடு,மனை சொத்து  கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2023’ சென்னை‘ நந்தம்பாக்கம்  வர்த்தக  மையத்தில்  வெள்ளியன்று (பிப்,17)  துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கிரெடாய் சென்னை கிளை தலைவர் சிவகுருநாதன், செயலாளர் க்ருதிவாஸ், எஸ்பிஐ வங்கி தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கி களப் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி  உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.  இந்தக் கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தங்களின் வீட்டு மனைகள், வீடுகள், வில்லாக்கள் மற்றும் வணிக இடங்கள் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்தி உள்ளன. வீடு தேடுவோர், தங்களின் கனவு சொத்துகளை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த கண்காட்சி சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. இதில் 10 லட்ச ரூபாய் முதல் 10 கோடி வரையிலான சொத்துகள் விற்பனைக்கு உள்ளன.  வீடு வாங்குபவர்கள் எந்தவித பிரச்சினைகளுக்கும் ஆளாகாத வகையில் அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கிரெடாய் நிர்வாகிகள் தெரிவித்தனர்.