திருவண்ணாமலை, ஜன.1- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகே மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறையின் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளை கொண்ட மாவட்டங்களில், வேட்டை தடுப்பு காவ லர்களாக ஆதிவாசி பழங்குடி மக்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த நடைமுறையை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவுட்சோர்சிங் ஏஜெண்ட் மூலம் பணியாளர்களை அதுவும் வனம் சம்மந்த மான அனுபவம் மற்றும் தொடர்பில்லாத நபர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறி விப்பு வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை யால் ஆதிவாசி பழங்குடியினர் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வருபவர்கள், வனப்பகுதி யில் பணியாற்றிய அனுபவம் இல்லாத நிலையில், மரங்கள், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க முடியாது. மேலும், இச்செயல் வேட்டையாடுபவர்க ளுக்கு உதவிகரமாக அமையும். எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு வனத்துறை யில் அவுட்சோர்சிங் முறையில் பணி யாளர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்து, ஆதிவாசி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டம் தளி பேரூராட்சி துணைத் தலைவராகவும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளராக செயல்பட்ட பழங்குடி செல்வம் மீது கொலை வெறித் தாக்கு தல் நடத்திய ஆதிக்க சாதியை சேர்ந்த சீனு என்பவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், ஜமுனாமரத்தூர் வட்டத்தில் மோச மான நிலையில் உள்ள அனைத்து கிராம சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.மணிமாறன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செய லாளர் இரா. சரவணன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்க டேசன், மாவட்டச் செயலாளர் அ. உதய குமார், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கே. வெங்கடேசன், சிபிஎம் போளூர் வட்டச் செயலாளர் இரா.இரவிதாசன், மாவட்ட குழு உறுப்பினர் இரா.சிவாஜி, பொன்னு சாமி ஆகியோர் பேசினர்.