districts

சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

வேலூர், ஜூன் 16-

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளுவாடி மலை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒடுகத்தூருக்கு சென்று தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற னர். இதனால் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.