திருவள்ளூர், செப் 3- திருக்கண்டலம் ஊராட்சியில் அண்மை யில் கந்துவட்டி கொடுமையால், இருளர் இனத்தை சேர்ந்த வேலு என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அறிவழகன் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளன. சிபிஎம்-மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள் கந்து வட்டி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் வசூலிப்பதில், கடுமையான நடைமுறை களை பின்பற்றாமல், மனிதாபிமான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் எல்லா விதிகளும் இங்கு மீறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சிபிஎம் தலைவர்கள் செவ்வா யன்று (செப் 3), அண்ணா நகரில் பாதிக்கப் பட்ட வேலுவின் குடும்பத்தை சந்தித்து ஆறு தல் கூறினார். இதுகுறித்து சிபிஎம் தலைவர் கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட வேலுவின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மூன்று பெண் குழந்தை கள் உயர்கல்வி வரை படிப்பதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும், வேலுவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வேலுவின் தற்கொலைக்கு காரணமான அறிவழகன் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர். திருக்கண்டலம் அண்ணா நகரில் உள்ள 280 குடும்பங்களையும் கந்து வட்டி கொடுமையில் சிக்கியுள்ளனர். இவர்களை இக்கொடுமையிலிருந்து இவர்கள் மீட்கவும் சுயதொழில் செய்யவும் வங்கி கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர். கோரிக்கைகளை நிறை வேற்றாத தால் வேலுவின் உடலை வாங்க கடந்த மூன்று நாட்களாக உறவினர்கள் மறுத்து வருகின்ற னர். இதில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பின ரும் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.கங்காதரன், மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், வேட்டைக்காரன் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவர் டி.டில்லி, சிபிஎம் அண்ணாநகர் கிளை செயலாளர் சரோஜம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.