திருவள்ளூர், ஆக 28- திருவள்ளூர் அருகில் உள்ள மூலக்கரையில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததால், சிபிஎம் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மேலா னூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கரை பகுதியில், சென்னை மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி வரை உள்வட்ட சிபிஆர்ஆர் சாலை அமைப்பு பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. மூலக்கரை பகுதியில் எம்எம் ரோடு செல்கிறது. இந்த சாலை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் மேலானூர் மாந்தோப்பு, சித்தம்பாக்கம், மொண்ணமேடு, பேட்டை, எரையூர், சியஞ்சேரி, அரும்பாக்கம். மெய்யூர், ராஜபாளையம், வெம்பேடு தேவந்த வாக்கம், மாளந்தூர், ஆவாஜிப் பேட்டை உட்பட்ட பல்வேறு கிராமங் களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த கிராமங் களிலிருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், விவசாயிகள், பெண்கள் மருத்துவ மனைக்கு செல்வது என அனைத்து தேவைகளுக்கும் திருவள்ளூர் வந்து செல்ல நுழைவாயிலாக மூலக்கரை பகுதி அமைந்துள்ளது. இந்த நுழை வாயிலை அடைத்து போக்குவரத்தை துண்டிக்கும் வகையில் நெடுஞ் சாலைத்துறையினர் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மெய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மூலக்கரை பகுதியில் பன்னெடுங்கால மாக சென்று கொண்டிருக்கும் சாலையை துண்டிக்காமல், அங்கு சுரங்கப்பாதை (Underpass), அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் மூலக்கரையில் வியாழனன்று (ஆக 29), வட்ட குழு உறுப்பினர் கே.முரு கன் தலைமையில் சாலை மறியல் நடைபெறும் என அறிவித்து கிராம கூட்டங்களை நடத்தி போராட்டத்திற்கு ஆயத்தமாகி வந்தனர். இந்த சூழலில் திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் ஆக 27 அன்று போராட்டக்குழு தலைவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 7மீ அகலம், 4 மீ உயரம் கொண்ட கீழ்பாலம் அமைக்கப்பட உள்ள இடம் அரசு புறம் போக்கு நிலம் என்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் மூலமாக நிலதிட்ட அட்டவணை பெறப்பட்டு நில உரிமை மாற்ற அரசிற்கு உத்தரவு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்பாலம், வரைப்படம் தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. கீழ் பாலம் பணி மார்ச் 2025-குள் முடிவுபெறும் என நெடுஞ்சாலைத் துறையினரால் தெரிவிக்கப்பட் டுள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினரால் உறுதி அளித்ததின் பேரில் ஆக 29 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், திருவள்ளூர் வட்டாட்சியர் மதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர், சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் த.கன்னியப் பன், வட்ட குழு உறுப்பினர்கள் கே.முருகன், கே.விஜயகுமார், கிளை செயலாளர் டி. டில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.