‘அம்பேத்கர் பெயரை திரும்ப திரும்ப உச்சரிப்போம். அம்பேத்கரை அவமரியாதை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவே ராஜினாமா செய்’ என முழக்கமிட்டு வெள்ளியன்று (டிச.20) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.சிவகுமார், பா.சீனிவாசன் (அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்), பார்வேந்தன் (சமத்துவ வழக்கறிஞர் சங்கம்), கு.பாரதி (ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்), விஜயகுமார் (சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் மையம்), கிருஷ்ணகுமார் (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.