சென்னை, ஏப். 27- நாட்டில் மேலும் 17 மத்தியஸ்த மையங்களை தொடங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தெரி வித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு மற்றும் 2023ம் ஆண்டு மத்தியஸ்த சட்டம் பற்றிய சிறப்பு பயிற்சி குறித்த கருத்தரங்கம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.27) நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசுகையில், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலமாக சட்ட உதவி, லோக் அதாலத், கைதிகளுக்கான சட்ட உதவி உள்பட 19 திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் கடந்த 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை சட்ட உதவி கோரி 51,824 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 48,352 விண்ணப்பங்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. லோக் அதாலத் மூலம் 863 அமர்வுகள்அமைக்கப்பட்டு 3.53 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப் பட்டுள்ளது. இதன்மூலம், 2,652 கோடி ரூபாய் அளவுக்கு பைசல் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மத்தி யஸ்த மையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 32 மத்தியஸ்த மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் 17 மையங்களை தொடங்க உள்ளோம். அனைத்து சட்டங்களிலும் மத்தியஸ்த பிரிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள மத்தியஸ்த சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பேசுகையில், கடந்த 2005ஆம் ஆண்டு மத்தியஸ்த நடை முறையை கொண்டு வர வழக்கறி ஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அந்த நிலை மாறி விட்டது. மத்தியஸ்த மையங்கள் தற்போது முழுமையாக வழக்கறிஞர்களால் நடத்தப்படுகிறது. இதில் 48 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றார். மத்தியஸ்தத்துக்கு பிறப்பிடம் சென்னை உயர் நீதிமன்றம் தான். மத்தியஸ்தத்துக்கு பல திறமைகள் தேவை. சட்ட அறிவு வேண்டும். உளவியல் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு பாரபட்சம் இல்லாத சிறந்த தீர்வு முறை தான் மத்தியஸ்தம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மாவட்ட நீதிமன்றங்களில் 2.37 கோடி வழக்குகளும், உயர் நீதி மன்றங்களில் 20.67 லட்சம் வழக்கு களும், உச்சநீதிமன்றத்தில் 52,660 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடி வுக்கு வர எத்தனை நாட்களாகும் என்று எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் மாவட்ட நீதி மன்றங்களில் ஒரு நீதிபதி 25, 129 வழக்குகளையும், உயர் நீதி மன்றத்தில் 2,636 வழக்கு களையும், உச்ச நீதிமன்றத்தில் 1,548 வழக்கு களையும் விசாரிக்க வேண்டும். இது சாத்திய மற்றது. இந்தியாவில் லோக் அதாலத் மூலம், 2023இல் 6 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. லோக் அதலாத் விழிப்புணர்வு அனைத்து கிராம மக்களும் லோக் அதாலத் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். பிரச்ச னைகளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்பிக்கை வைத்திருக் கிறார்கள். மத்தியஸ்தத்துக்கு வந்த 35 லட்சம் வழக்குகளில், 10 முதல் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலமும் மத்தியஸ்தம் செய்யும் திட்டமும் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலை வர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வர வேற்றார். புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.