திருவள்ளூர்,ஜூலை 16-
கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சட்டைகளை வழங்கினர்.
கவரைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமையன்று (ஜூலை 15), காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப் பட்டது. இதில் கும்மிடிப் பூண்டி வட்டார கல்வி அலு வலர் முரளி தரன், கீழ்முத லம்பேடு ஊராட்சி மன்றத் தலை வர் ஜி.நமச்சிவாயம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பால கிருஷ்ணன், செயலளார் பிர பாகரன், வார்டு உறுப்பி னர் பாலாஜி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலை வர் பி.நாகலக்ஷ்மி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி வரவேற்றார். 1969-ல் பயின்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சொக்கலிங்கம் என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு வீரர்கள் அணியும் டீ சட்டைகளை வழங்கினார்.
கவரைப்பேட்டையை சேர்ந்த முன்னாள் மாணவர் கோபாலகிருஷ்ணன், பள்ளி மாணவர்களுக்கு ரூ.40ஆயிரம் மதிப்பீட்டில் கால்சட்டைகளை வழங்கி னார். நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, ஓவிய போட்டி, நடனம், பாட்டுப் போட்டி, மாறு வேடப்போட்டி முதலியன நடைபெற்றது.