புதுச்சேரி, ஆக.6-
குடியரசு தலைவர் வரு கையையொட்டி புதுச்சேரி யில் பாதுகாப்பு ஏற்பாடு களை ஆட்சியர் வல்லவன் ஆய்வு செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக திங்களன்று (ஆக.7) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு வரு கிறார். லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகை அவரை துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஜிப்மர் செல்கிறார். அங்கு ரூ. 17 கோடியில் புதிதாக வாங் கப்பட்டுள்ள புற்றுநோய்க் கான நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப் பணிக்கிறார். தொடர்ந்து காலை 11.05 மணி முதல் 12.45 மணி வரை நடை பெறும் விழாவில் பங்கேற் ்கிறார். இவ்விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கை கள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை திறந்து வைக்கிறார்.
கலை நிகழ்ச்சி
மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவி கைவினை கிராமத்தில் சென்று கலை நிகழ்வுகள் பார்வையிடுகிறார்.மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கங் கைவராக நதீஸ்வரர் கோவி லுக்கு செல்கிறார்.
மறுநாள் 8 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம் அத னைத் தொடர்ந்து, 11.15 மணிக்கு ஆரோவில் செல்கி றார். பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
துணை ராணுவம்
குடியரசு தலைவர் வரு கையையொட்டி பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன. ஆயிரத்திற் கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி, நெய் வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் வரு கையையொட்டி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, டிஜிபி சீனிவாஸ், ஆட்சியர் வல்லவன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) ஆய்வு செய்தனர்.
கடைகள் அகற்றம்-தடை!
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, இரண்டு நாட்கள் ட்ரோன் கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிய ரசுத் தலைவர் செல்லும் சாலைகளில் சாலையோர கடைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. நகரப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் கள், கட் அவுட்டுகள் அகற்றப் பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் செல்லும் முக்கிய சாலை களில் சாலையோர வியா பாரத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. உப்பனாறு வாய்க்கால் தெரியாமல் இருக்க தடுப்புக்கட்டை அமைத்து திரைச்சீலை போட்டு மூடினர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு நுழை யும் அனைத்து வாகனங் களையும் சோதனை செய்யப்படுகிறது.