districts

சென்னை முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்

செங்கல்பட்டு,ஜன.14- மதுராந்தகம், மேல்மரு வத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.  இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனி மூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன. மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிறன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக  மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை, ஜன.14-  சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  ஞாயிறன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.மெட்ரோ ரயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள். ஊழியர்கள் மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெளிநாட்டுப் பயணிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்

செங்கல்பட்டு,ஜன.14-  மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல்விழா மாவட்ட ஆட்சியர்  ஆ.ர. ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ், ரஷ்யா சுவீடன், போலந்து உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.  அங்கு நடனமாடிய தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களுடன் கைகோர்த்து கரகாட்டம், தப்பாட்டம் நடனமாடி மகிழ்ந்தனர்.பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  ஆ.ர.ராகுல்நாத் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி  அனாமிகா ரமேஷ் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, உதவி ஆட்சியர் பயிற்சி ஆனந்தகுமார் சிங் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அரசு அலுவலர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.

கிளாம்பாக்கத்தில்  புதிய உயர்மட்ட நடைபாதை

வண்டலூர், ஜன.14- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவிவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மேலும் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் புதிதாக அமைய உள்ள ரயில் நிலையம் இடையே உயர்மட்ட நடைபாதை அமைக்க நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5,900 ச.மீ நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நடைபாதை 400மீ நீளத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும் பனி மூட்டம்  சரக்கு வேன்கள் மோதி 5 பேர் படுகாயம்

திருவள்ளூர் ,ஜன.14- திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனி மூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.  சென்னையில் இருந்து திருத்தணிக்கு ஞாயிறன்று காலை காய்கறி, கரும்பு ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்த்து. கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள்மீது  சரக்கு வாகனம் மோதியது. இதில் திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு படுகாயமடைந்தார். கட்டுப்பாடடை இழந்த சரக்கு வேன் திருத்தணி யில் இருந்து கனகம்மா சத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோ மீதும் மோதி யது. இதில் 5பேர் காய மடைந்தனர்.

அரசு பேருந்துகளில் இரண்டு நாட்களில்  4.34 லட்சம் பேர் சொந்த ஊர்  பயணம்

சென்னை,ஜன.14- தமிழ்நாடு அரசு இயக்கிய பொங்கல் சிறப்பு பேருந்துகளில் கடந்த இரண்டு நாட்க ளில் மட்டும் 4.34 லட்சம் சொந்த ஊர் சென்றதாக போக்குவரத்துத்துறை   அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மொத்தமாக 20,084 பேருந்துகள் இயக்கப்பட்டது. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்ட தடப் பேருந்துகள் 9,103, உதிரி பேருந்துகள்  1,361 என மொத்த பேருந்து களான 10,464 பேருந்துகளில் 4,446 பேருந்து கள் சனிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டது.  இந்தாண்டு பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே சனிக்கிழமை (13ந்தேதி) தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. மொத்தமாக 1,44,778 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.   சிறப்புப் பேருந்து இயக்கத்தை போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.  மேலும், கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதியதாக திறக்கப்பட்ட கிளாம் பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வ தற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காணும் பொங்கல் : மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் பலத்த பாதுகாப்பு

சென்னை,ஜன.14- சென்னையில் புதன்கிழமை(ஜன.17)  காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்காக மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற் காகக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கவசம் போன்று அடையாள அட்டைகளை கைகளில் கட்டி விட திட்டமிடப்பட்டு உள்ளது.

விவசாய தொழிலாளர்  சங்க கிளை உதயம்

விழுப்புரம்,ஜன.14- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ள கரசானூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், வட்டத் தலைவர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், செய லாளர் எம்.ராஜா கீர்த்தி, பொருளாளர் ஆர்.கண்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிளாக தேர்வு செய்யப்பட்டனர்.

சில்லரை விலைப் பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத உயர்வு!

புதுதில்லி, ஜன. 14 - 2023 டிசம்பரில், இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் 5.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளி யிட்டுள்ளது. அதில், 2012=100 என்ற அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் 2023 டிசம்பர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீடு தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டன. காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் போன்ற பிரிவுகளில் ஏற்பட்ட உயர்வால் இந்தியாவின் சில்லரை பண வீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் 5.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மறுபுறத்தில், பலவீனமான உற்பத்தி, நவம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.4 சதவிகிதத்திற்கு இறங்கியது ஆகியவையும் காரணம் என்று கூறப்படுகிறது.

வி.கே.டி சாலையை செப்பனிடக் கோரி  7 மையங்களில் பிப் 9 சாலை மறியல்

கடலூர், ஜன.14- 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2020-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டிய விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை (NH45C) பணிகள் 6 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாமல் தொடர்கிறது. இதனால் விபத்து, உயிர் பலி, உடல் ஊனம், வாகனங்கள் சேதம், போக்கு வரத்து இடையூறுகள் என பல சிரமங்களை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டாண்டாக மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டத்தில் பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, சேத்தியாதோப்பு   பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கிறது. நெய்வேலியில் அரசியல் கட்சிகள்-தொழிற்சங்கங்கள்-வர்த்தக அமைப்புகள், நல அமைப்புகள் இணைந்த போராட்டக்குழு 2022  அமைக்கப்பட்டு, பெருந்திரள் ஆர்ப்பாட்டமும்,  பொதுக்கூட்டம், தெரு முனை பிரச்சாரம்,2022 ஆகஸ்ட்-10ல் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் வருவாய்கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை  அதிகாரிகள் உறுதிமொழிகளைஅளித்தனர். விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு வரை ஒருவழிப்பாதையை 2022 செப்டம்பர்-30க்குள் அமைப்பது.விக்கிர வாண்டி - சேத்தியாதோப்பு வரை உள்ள சாலை மற்றும் மேம்பால பணிகள் முழுவதை யும்2023 நவம்பர்-30 க்குள் முடிப்பது. நெய்வேலி ஆர்ச், கொள்ளுகாரன் குட்டை, வடலூர் கண்ணுத்தோப்பு பாலங்கள் மற்றும் பண்ருட்டி-வடலூர் வரை யிலான சாலை பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து முடிப்பது என ஏற்றுக் கொண்டனர்.அடுத்த சில மாதங்கள் சாலை பணிகள் துரிதமாக நடைபெற்ற போது ஏற்றுக்கொண்டஅடிப்படையில் பணி கள் நிறைவு பெறும் என அனைவரும் எண்ணினர் ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதி 6 மாதங்களிலேயே காலவதி யாகி உள்ளது . தற்போது ஒட்டு மொத்த பணியும் நின்றுவிட்டது. இந்நிலையில் ஒன்றிய-மாநில அரசு களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 09-01-2024 அன்று கண்டரகோட்டை, பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி ஆர்ச் கேட், வடலூர் ,சேத்தியாதோப்பு, சோழ தரம் ஆகிய 7 மையங்களில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூ. 15 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

ஒசூர், ஜன.14- ஒசூர் கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு நிலமான 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த வீர பத்தரய்யா கடந்த 15 வருடங்களாக அறக்கட்டளை  பெயரில் பயன்படுத்தி வந்தார். இந்நிலத்தை மீட்குமாறு மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு,சாராட்சியர் பிரியங்கா உத்தரவிட்டனர். ஒசூர் வட்டாட்சியர் சுப்பிரமணியன் முன்னிலையில் வருவாய் துறையினர் அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த குடிசைகளை அகற்றி நிலத்தை மீட்டனா். இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு  ரூ.15 கோடி என வட்டாட்சியர் சுப்பிரமணி தெரிவித்தார்.