districts

img

கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

கடலூர், நவ.6 - கடலூர் அரசு மருத்துவ மனையில் உள்ள டெங்கு வார்டை  சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குவிகின்றனர் என பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில்  கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளிடம் விசாரிப்பு   அப்பொழுது காய்ச்சல் சிறப்பு பிரிவு, டெங்கு பிரிவு ஆகியவற்றில் நேரடியாக சென்று நோயாளிகளின் உடல் நலம் குறித்து கேட்ட றிந்தனர். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிர மணியன், கடலூர் மாவட்டத்தின் மருத்துவ கட்டமைப்பு மற்ற மாவட்டங்களை பொறுத்த வரையில் அதிகமாகவே உள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இந்த மாதத்திலும், கடந்த ஆண்டினை காட்டில் இந்த ஆண்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றார். வடகிழக்கு பருவமழை என்றால் காய்ச்சலும், டெங்கு பாதிப்பு தவிர்க்க முடியாதது தான் என குறிப்பிட்ட அவர், இதுவரை டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் வரும் காலங்களில் தமிழ கத்தில் டெங்கு உயி ரிழப்பு பூஜ்ஜிய நிலையை அடையும் என்றார். கேத்லேப் சாதனம் நிறுவப்படும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கேத்லேப் சாதனம் அமைக்கப்படும் என தெரிவித்த மா.சுப்பிர மணியன் மேலும் தமிழ கத்தில் மருத்துவமனைக ளில் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நிரப்பப்படும் எனவும்  குறிப்பிட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்த செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா. ராஜேந்திரன், சிந்தனை செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஹரியன் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.