districts

img

மாநகராட்சி ஆணையர் மீது அதிருப்தி மண்டலக்குழுத் தலைவர்கள் நேரடி குற்றச்சாட்டு

சென்னை, ஜன.31- மாநகாட்சி ஆணையர் குமரகுருபரன் மீது  மண்டலக்குழுத் தலைவர்கள் அதி ருப்தி தெரிவித்து நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர்கள் செம்மொழி, இளையா மற்றும் பணிகள் நிலைக்குழு தலைவர் நெ.சிற்றரசு ஆகியோர், உறுப்பி னர்களால் ஆணையரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. நிலைக்குழு கூட்டங்க ளில் மண்டல அதிகாரிகள், துறை உயர் அதி காரிகள் பங்கேற்பதில்லை. இதனால் நிலைக்குழு பணிகள் பாதிக்கப்படுகிறது. கவுன்சிலர்களை சந்திக்க குறிப்பிட்ட நேரத்தை ஆணையர் ஒதுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்றனர். குறிப்பாக கல்வி நிலைக்குழுத் தலை வர் விஸ்வநாதன் பேசுகையில், மன்ற உறுப்பினர்களை சந்திக்க  ஆணையர் நேரம் ஒதுக்க மறுக்கிறார் என்றார். துணைமேயர் மு.மகேஷ்குமார் குறிப்பிடுகையில், நிலைக்குழு கூட்டங்க ளில் தலைமை பொறியாளர், துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பதை ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும். கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையென்றால் குழுத்தலை வர்கள் கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்றார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, 6 நிலைக்குழுக்கள் உள்ளன. முதல் வாரத்தில் கூட்டம் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதிகாரிகள் உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். கடந்த கால நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார். கடந்த மன்றக்கூட்டத்தின் போது, சிபிஎம் உறுப்பினர்கள் ஆணையர் மீது புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், குழுத் தலைவர்களும் ஆணையர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.