கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால் துண்டிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான அதிநவீன செயற்கை அவையங்களையும், சுய தொழில் செய்ய வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1.75.000 காசோலையையும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வழங்கினார். இதில் வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.