districts

img

வலிப்பு நோயிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியவர்கள் மகிழ்ச்சி

வலிப்பு நோயிலிருந்து இயல்பு  நிலைக்கு திரும்பியவர்கள் மகிழ்ச்சி  சென்னை, பிப்.8-  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக ளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவர்களை அந்த நோயில் இருந்து குணப்படுத்தி, இயல்பான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ சென்னையை சேர்ந்த மருத்துவமனை உதவியுள்ளது. சென்னை பெரும் பாக்கத்தில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் இதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. இதில் வலிப்பு நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நோயாளிகளை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சுதன், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் டி எம் என் தீபக் முன்னிலையில் கவுரவித்தார்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஜெமினி தலைவர் மகபூ பாஷா; ஹீலர்ஸ் நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீபா சாத்தே, மருத்துவமனையின் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ், சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சர்வதேச கால்-கை வலிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.