ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: உடற்பயிற்சி ஆசிரியர் கைது
சென்னை, ஜன.30- வியாசர்பாடி எம்.கே.பி.நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பெண் உடற்பயிற்சி ஆசிரியைக்கு, அதே பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் அறி வழகன் (53) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குடியரசு தின விழாவிற்குப் பின், விளையாட்டு உபகரணங்களை அறையில் வைக்கச் சென்ற ஆசிரியைக்கு அறிவழகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆசிரியை தனது கணவரிடம் புகார் கூறி யதை அடுத்து, எம்.கே.பி.நகர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அறிவழகன் கைது செய்யப்பட்டார்.
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி
விழுப்புரம், ஜன.30- உத்தரகாண்ட் மாநி லத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் தோபால், இவர் கர்நாடக மாநிலம் பெங்களூ ருவில் தனியார் நிறு வனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வரும் இவர், மனைவி ஸ்ரிமிதி நொய்வால், மகன் பர்ஜன்யா (10), மகள் தேவிபர்னிக்கா (5) ஆகியோருடன் விழுப்பு ரம் மாவட்டம், கோட்டக் குப்பம் அருகே மஞ்சக் குப்பம் இ.சி. ஆர்.சாலை யில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். சம்பவத்தன்று தேவி பானிக்காவின் பிறந்த தினத்தை குடும்பத்துடன் கொண்டாடினர். அப்போது சிறுமி தேவி பர்னிக்கா மட்டும் நீச்சல் குளத்தில் விளையாடியுள்ளார். அப்போது திடீரென தண்ணீ ரில் மூழ்கினார். பின்னர், அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் மகளை பறிகொடுத்த பெற்றோர் கள் கதறி அழுதனர். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.