விழுப்புரம், ஜூலை 1- விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். உத்தரபிரதேசம் மாநிலம், ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சதாப் (வயது 35). முரதாபாத் மாவட்டம், கஜிபுரா கிராமத்தைச் சேர்ந்த இர்பான் (42), புதுதில்லி ராஜீவ் நகரை சேர்ந்த அலி ( 27) ஆகியோர் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில்மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தர விட்டார். இதனையடுத்து போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.