வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி விஐடி பல்கலைக்கழக அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி இந்நிகழ்வை துவக்கி வைத்தார். இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இராமசந்திரன் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.