செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களுக்கு உரிய தண்டனை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரின் மு.தமிழ் பாரதி தலைமையில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர் .