districts

img

சுகாதார சீர்கேட்டில் காவலர் குடியிருப்பு

ராணிப்பேட்டை, ஆக. 1 –  தமிழ்நாடு காவல்துறை தான் மக்க ளுக்கு பாதுகாப்பு. ஆனால் சோளிங்கரில் காவலர் குடியிருப்புக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலை நிலவுகிறது. இந்தக் காவலர் குடியிருப்புக்கு சுற்றுச் சுவர் இல்லாத காரணத்தினால் கால்நடை கள், பாம்புகள் வீட்டிற்குள் நுழைகிறது. சில நேரங்களில் திருடர்களும் நுழைகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் காவ லர் குடியிருப்பு அருகே மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாய நிலையில் உள்ளது. மேலும் சோளிங்கர் சித்தூர் சாலை அருகே கழிவுநீர் தேங்கி இருப்பதால் பேருந்துகள் போகும் போது கழிவுநீர் சிதறி பயணிகள் மீதும் பள்ளி மாணவர்கள் மீதும் தெறிக்கிறது. சுகாதாரமற்ற நிலையால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.