குரூப் 2, 2ஏ தேர்வு கூடுதல் பணியிடங்கள்
சென்னை, நவ. 10- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக ளுக்கான கூடுதல் காலிப் பணியிடங்கள் எண்ணிக் கையை டிஎன்பிஎஸ்சி அறி வித்துள்ளது. ஏற்கெனவே 2,540 பணி யிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு நடை பெற்று வரும் நிலையில் தற்போது கூடுதலாக இந்த தேர்வுகளில் 213 பணியிடங்கள் சேர்க்கப் பட்டிருப்பதாக டிஎன்பி எஸ்சி தலைவர் தெரி வித்துள்ளார். உதவி ஆய்வாளர், துணை வணிகவியல் அலு வலர், சார்பதிவாளர் நிலை 2 தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணி யிடங்களுக்கு தேர்வுகள் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வர்களின் கோரிக்கை யை ஏற்று கூடுதலாக தற்போது 213 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் பல்வேறு தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெறும் போது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுடன் கூடுத லாக சில காலி இடங்கள் சேர்க்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால்நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி
சென்னை, நவ. 10- ஜவஹர்லால் நேரு வின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் பேச்சுப் போட்டி நவ.12 அன்று பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியிலும் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
நாமக்கல், நவ.10- பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த னர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரின் மகன் வினித் விமல்ராஜ் (21). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி யாண்டு பொறியியல் பயின்று வந்தார். அதே கல்லூரியில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் நந்தகுமார் (21) மற்றும் ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் ஷேக் பைசுல் ரகுமான் (21) ஆகியோர் பயின்று வந்தனர். நண்பர்களான 3 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று வினித் விமல்ராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். இதன்பின் வினித் விமல்ராஜ் தனது பெற்றோரிடம் நானும், தனது நண்பர்களும் நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வராததால் வினித் விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரின் காலணிகள், ஆடைகள் மற்றும் செல்போன்கள் ஆற்றின் கரையில் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஜேடர் பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறை யினர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ள னர். தீயணைப்பு துறையினர் காவல் துறை உதவியுடன் காவிரி ஆற்றில் மூன்று கல்லூரி மாணவர்களையும் இரவு முழுவதும் தேடிவந்தனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஞாயிறன்று காலை நாமக்கல் தீய ணைப்புத் துறையினர் மூலம் காவிரி ஆற்றில் காணாமல் போன மாண வர்களை தேடினர். அப்போது சிறிது தூரத்தில் உள்ள ஒரு பாறை இடுக்கில் வினித் விமல் ராஜ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து மற்ற இரண்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டு ஜேடர்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி படிப்புகள் நாராயணி மருத்துவமனை - திருவள்ளூர் பல்கலை ஒப்பந்தம்
வேலூர், நவ.10 - வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நுண்ணுயிரியல், உயிரி யல் மற்றும் பயோ டெக்னாலஜி ஆகிய வற்றில் பி.எச்டி படிப்புகளை தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் பேரா சிரியர் ஆறுமுகம் முன்னிலையில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் செந்தில் வேல்முருகன் மற்றும் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறு முகம் பேசுகையில் உயர்தரமான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைக்கான தயார்நிலை ஆகியவற்றை வழங்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். பி.எச்டி படிப்பு மாணவர்களுக்கு அதி நவீன ஆராய்ச்சியில் பயிற்சி அளிக்க உதவும் என்றும், மருத்துவ ஆராய்ச்சியில் வருங்கால தலைவர்களை உருவாக்க ஒரு படிக்கல்லாகவும் இருக்கும் என் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, புதிய கலை மற்றும் அறி வியல் கல்லூரி தொடங்குவது சம்மந்தமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகதுணை வேந்தர் ஆறுமுகம் மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி ஆகி யோர் ஆலோசனை செய்தனர். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் பாபுஜனார்த்தனம், டாக்டர் மாதவன், இயக்குனர்கள் பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் நாராயணி மருத்துவமனை மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன், ராம்பிரசாத் சீனிவாசன், மகேஷ்பாபு, பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனவ இளைஞர்கள் கப்பற்படையில் சேர இலவச பயிற்சி
சென்னை, நவ. 9- தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில் சேருவதற்கு ஏதுவாக 90 நாட்கள் வழி காட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் 4ஆம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியான மீனவர் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை, கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகம், மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றிலிருந்து இலவசமாக பெற்றுக் கொளலாம். இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம், மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு கையேடுகள் வழங்கப்படும். 3 மாதங்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் பயின்று மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 விழுக்காட்டிற்கு மேலும் பெற்ற மாணவர்கள், இத்துடன் உடற்கூறு தகுதிபெற்ற மீனவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 15க்குள் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அலுவலகம் அல்லது கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் லேசான நிலநடுக்கம்
கிருஷ்ணகிரி,நவ.10- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு,சந்தூர்,பனங்காட்டூர், புளியாண்டபட்டி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஊத்தங்கரையில் கவர்னர் தோப்பு,எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு 3.3 ரிக்டர் பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு ஏற்பட்ட போது வீட்டின் உள்ளே இருந்து உணர்ந்த மக்கள் பயந்து வெளியே ஓடி வந்துள்ளனர். 3.3 ரிக்டராக பதிவாகி உள்ள நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் இதனால் பூமிக்கு மேல் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்தனர்.
3, 4ம் பிரிவு பணியிடங்களில் புதிய நியமனங்களை செய்திடுக! காப்பீட்டு கழக ஊழியர் மாநாடு வலியுறுத்தல்
சென்னை, நவ. 10 - எல்ஐசியில் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் புதிய ஊழியர்களை நிய மிக்கவேண்டும் என்று காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் சென்னை பகுதி-1ன் 67ஆம் ஆண்டு ஆண்டு மாநாடு நவ.9-10 தேதிகளில் ராயப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பிரி மியம் மீதான ஜிஎஸ்டி-யை நீக்க வேண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) கைவிட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் 1995 ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை ப்படுத்த வேண்டும், எல்ஐசி-யை பொதுத்துறையில் பாதுகாத்து வலுப் படுத்த வேண்டும், பெரும்பான்மை ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு (ஏஐஐஇஏ) அங்கீகாரம் மற்றும் கூட்டுப் பேர உரிமையை வழங்க வேண்டும், சென்னை கோட்டம்-1, 2இல் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழி யர்களுக்கான பணியமர்த்தல், பதவி உயர்வு, மாறுதல் போன்றவற்றில், 2013ம் ஆண்டில் மண்டல நிர்வாகம் வெளியிட்ட ஆணையை அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை பொதுக்காப் பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக் கவும் மற்றும் தனியார்மயமாக்க முய லும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஆண்டறிக்கையை பொதுச்செய லாளர் எஸ்.ரமேஷ் குமாரும், வரவு செலவு அறிக்கையை ரமேசும் சமர்ப் பித்தனர். ஏஐஐஇஏ தலைவர் வி.ரமேஷ், சென்னை பகுதி-1ன் முன்னாள் தலைவர் ஜி.ஜெயராமன், பொருளாளர் கே.ஸ்ரீதர், தென்மண்டல காப்பீட்டு ஊழி யர் கூட்டமைப்பு உதவி பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பகுதி -1ன் இணைச் செயலாளர் கே.விஜயலட்சுமி நன்றி கூறினார். நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக கே.கிரிதர், பொதுச் செயலாளராக எஸ்.ரமேஷ் குமார், பொருளாளராக யு.ரமேஷ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கும்பல் பாலியல் வல்லுறவு கொடுமை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கடும் கண்டனம்
புதுதில்லி,நவ.10- தில்லியில் மனநிலை பாதிக்கப் பட்ட பெண் ஒருவர், மிகக் கொடூர மான முறையில் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டி ருப்பதற்கு, ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை யின் செயலாளர் முரளிதரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தில்லிக் காவல்துறை, குற்றம் புரிந்த கயவர்களைக் கண்டு பிடித்துவிட்டபோதிலும், இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கழித்த பின்னர்தான் இது தொடர்பான விவரங்கள் வெளிச் சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை கொஞ்சம் கூருணர்வு டன் நடந்துகொண்டுள்ள அதே சம யத்தில், இவ்வழக்கை விசாரிப்பதில் அது கையாண்ட முறைகள் சர்ச்சைக் குரியவை மற்றும் சிக்கல் நிறைந்த வையாகும். வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் அவர்களுக்கு இது போன்ற வழக்குகளை விசாரணை செய்வதில் போதுமான அளவிற்கு பயிற்சி இல்லாததையே காட்டு கின்றன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணுடைய கல்வித் தகுதிகள், அவர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயர், பார்த்திடும் வேலை, பணி புரியும் இடம் உட்பட அவருடைய தகவல்களைக் காவல் துறையினர் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த கவலையை அளிக்கக்கூடிய வைகளாகும். இவ்வாறு இவர்களு டைய நடவடிக்கை 2023ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் 72ஆவது (பழைய இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 228-ஏ-1) பிரிவை மீறும் செயலாகும். இப்பிரிவின்படி, ப