வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து செவ்வாயன்று (நவ.19) ஏரியை ஒட்டியுள்ள சசி நகர், காந்தி நகர் பகுதிகளில் அளவீடு செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, திமுக பகுதிச் செயலாளர் சு.சேகர், சிபிஎம் தொகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் தலைமையில் மக்கள் திரண்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.