சென்னை,மே 12- ஆஷாநிவாஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பால்வாடி குழந்தைகளுக்கான பட்டமளிப்புவிழா துரைப்பாக்கம் கண்ணகி நகரில் சமீபத்தில் நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை ஆலய பங்குதந்தை கபிரியேல், திருவள்ளுவர் நகர் காவல்துறை ஆய்வாளர் சௌந்தர்ராஜன், வழக்கறிஞர் நந்தினி தேவி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு 41 குழந்தை களுக்கு முன்பருவ கல்வி முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கினர். ஆஷாநிவாஸ் சமுதாய வளர்ச்சி அலுவலர் மேரி மேக்தலின், முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் லில்லி ஜோஸ்பின் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்ட னர்.