சென்னை, பிப்,6- அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த 700 மாணவர்க ளுக்கு பட்டம் வழங்கும் விழா-2024, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுப்பல்லி தலை மையில் வியாழனன்று (பிப்.6) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய கல்லூரிகளில் 2024-ம் கல்வியாண்டில் இளங்கலை பொறியியல் படிப்பில் தேர்ச்சிப்பெற்ற 700 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களுக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சமூ கத்திற்கு தங்கள் சேவையை ஆற்றும் எண்ணத்தோடு மகிழ்ந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைகழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் எஸ்.உஷா, பதிவாளர் முனைவர் ஜெ.பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெ.சக்திவேல், அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் இயக்குநர் பெ.அரிகரன், உறுப்பு கல்லூரிகளின் புலமுதல்வர்கள் இரா.செந்தில், கோ.செந்தில்குமார், வே.கவிதா, பா.தமிழ ழகன், முனைவர் சி.முத்துகுமரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.