districts

சென்னை முக்கிய செய்திகள்

சோழிங்கநல்லூரில் அரசு குளம்  பாஜக பிரமுகரால் ஆக்கிரமிப்பு

சென்னை,நவ.22- சோழிங்கநல்லூரில் அரசுக்கு சொந்த மான குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் அவர்  மீது பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 198வது வார்டுக்குட்பட்ட காரப் பாக்கம் பகுதியில் சர்வே எண் 89ல் 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய கேணிகுளம் உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதி யில் இருந்து வரும் தண்ணீர் இந்த குளத்துக்கு வந்து சேரும்.அதனால் இந்த குளம், இப்பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலை யில், இந்த நிலத்தின்ஒரு பகுதியை  198வது வார்டு கவுன்சிலரும் பாஜக  ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர்  சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் அமைப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியாழனன்று சோழிங்க நல்லூர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட னர். இக்குளத்தின் ஒரு பகுதியை தனியார் நிலத்திற்கு செல்வதற்காக ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இதே போன்று குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சித்த போது எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப் பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

சுண்ணாம்புக்குளம் பகுதிக்கு தனி மின்மாற்றி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

திருவள்ளூர்,நவ.22- கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் நான்கு அலகுகளாக பிரிக்கப் பட்டு தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்வாரியத் துறை மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.   இதில் குறிப்பாக அலகு 4ல் எளாவூர் பீடரில் இருந்து பெரிய ஒபுளாபுரம், நாக ராஜ் கண்டிகை, காய்லர்மேடு, சரண் ப்ளைவுட், சின்ன ஒபுளாபுரம், சில தொழிற்சாலை பகுதி, பெத்திகுப்பம், எளா வூர், நரசிங்கபுரம், தலையாரிபாளையம், காட்டுகொள்ளை மேடு, மெதிபாளையம், சாலையான் கண்டிகை, வெட்டுக்காடு, வல்லம்பேடு குப்பம், பெரிய குப்பம், மூல ரோடு, எளாவூர், முல்லைவாயில்மேடு பல்வேறு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் சுண்ணாம்பு க்குளம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அடிக்கடி மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் மேற்கண்ட சுண்ணாம்புக்குளம் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தனி மின் மாற்றி அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையின் அடிப்படையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதத்தை அனு ப்பினார். அதன்பின்பு சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து  அதற்கான பணிகளை மின்வாரிய பொறியா ளர் உதவி செயற்பொறியாளர் அதிகாரிகள் சுண்ணாம்புக்குளம் சுற்றியுள்ள பகுதி களுக்கு தனி பீடரை கொண்டு செல்லும் பணி சுமார் ஒரு ஆண்டுகளாக நடைபெற்றது. இப்பணி ஒரு வாரத்திற்கு முன்பு நிறைவடைந் தது. பின்னர் இரண்டு நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து வியாழனன்று ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சுண்ணாம்புக்குளத்திற்கான தனி மின் மாற்றியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

ஹெர்னியா பராமரிப்பு மருத்துவ முகாம் 

சென்னை,நவ.22- சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவ மனையான பிரசாந்த் மருத்துவமனை, வயிற்று குடலிறக்கத் தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழிகாட்டி மற்றும் விரி வான சிகிச்சை வழங்க 2 வார மெகா ஹெர்னியா முகாமிற்கு  ஏற்பாடு செய்துள்ளது.  இந்த முகாம் நவம்பர் 30,2024 வரை, பிரசாந்த் மருத்துவ மனையின் வேளச்சேரி மற்றும் கொளத்தூர் கிளைகளில், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை (ஞாயிறு தவிர)  நடைபெறும். இந்த முகாமின் நோக்கம், வயிற்று குடலிறக்க அறி குறிகள், அபாயங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய விழிப்பு ணர்வை அதிகரிக்கும் போது, துல்லியமான மற்றும் குறைந்த ஆக்கிரமிப்பு சிகிச்சைக்கான மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை நுட்பங்களை உட்படுத்தி அதிநவீன சிகிச்சை விருப்பங்களை வழங்குவதாகும் என்று மருத்துவமனை களின் நிர்வாக இயக்குநர், டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பங்கேற்க, பிரசாந்த் மருத்துவமனை - வேளச்சேரி அல்லது கொளத்தூர் கிளை களை தொடர்பு கொள்ளலாம். அல்லது பதிவு மற்றும் விசார ணைகளுக்கு 08069595557 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ஆட்டோ ஓட்டுநர் கவனத்தை  திசை திருப்பி ரூ. 3 லட்சம் திருட்டு

சென்னை, நவ. 22- சென்னை அமைந்தகரையில் கவனத்தை திசை திருப்பி ஆட்டோவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின் றனர். தாம்பரம் ஆதி நகர் கிழக்கு முத்து மாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுகிதா (46). இவர் அக்காள் மகன் ரித்திஷ் உடல் நலக்குறைவு காரணமாக, கீழ்ப்பாக்க த்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவச் செலவுக்கு பணம் கொடுப்ப தற்காக தாம்பரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்துக் கொண்டு சுகிதா, தனது உறவினர் கிழக்கு தாம்பரம் காமராஜபுரத்தை சேர்ந்த லூர்துராஜ் (57)  என்பவருடன் ஒரு ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் நோக்கி வியாழக்கிழமை புறப்பட்டு வந்தார்.     அவர்கள், அமைந்தகரை ஈ வெ ரா பெரி யார் சாலையில் செல்லும்போது சாப்பாடு வாங்குவதற்காக அங்கு நிறுத்தியுள்ளனர். அப்போது சுகிதா பணம் இருந்த பையை ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த பெட்டி யில் வைத்துவிட்டு, அதை பார்த்துக் கொள்ளுமாறு லூர்துராஜிடம் கூறிவிட்டு ஓட்டலுக்கு சென்றார். அந்த நேரம் அங்கு வந்த ஒரு நபர், லூர்துராஜிடம் ஆட்டோ வின் அருகே ரூபாய் நோட்டுகள் கிடப்ப தாக கூறியுள்ளார். உடனே லூர்துராஜ் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி அங்கு கீழே கிடந்த பத்து ரூபாய் நோட்டுகளை சேகரிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்கு பின்னர், அவர் ஆட்டோவுக்கு வந்த போது, அங்கு சுகிதா வைத்துச் சென்ற  ரூ.3 லட்சம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சுகிதா, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு ப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்ற னர்.

வாழ்வாதார கோரிக்கைகளுக்கு போராட்டம்:  சிபிஎம் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி,நவ.22- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் குடியிருக்க இலவச வீடு, நிலம் வழங்க வேண்டும், மாநக ராட்சியில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.  கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டும். ஓசூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்,மத்திகிரியில் குப்பை கூடமாக மாறிய சமுதாய சீர மைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும். மாநகரில் காவல் ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்.  10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அனைத்து மக்களுக்கும்  இலவசமாக பட்டாக்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட மக்கள் நல வாழ் வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர் மற்றும் ஓசூர் ஒன்றிய குழு சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் சாராட்சியர் அலுவலகம் வரை நடைபயண பிரச்சாரம் மற்றும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி,முன்னாள் மாநகர செய லாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் ஆகியோர் தலைமையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண் டன், செயற்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, சி.சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் நாராயணமூர்த்தி ஸ்ரீதர், மாநகர, ஒன்றியக் குழு உறுப்பினர் களுடன் 500-க்கும் மேற்பட்ட போது மக்களும் கலந்து கொண்டனர்.   இந்த பிரச்சார இயக்கத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு காவல் துறைக்கு கடிதம் கொடுத்தனர். வழக்கம்போல் காவல்துறை மவுனம் காத்தது. இதனால், திட்டமிட்டபடி பிரச்சாரம் துவங்கியபோது சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் அரசு  அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர். இந்த நிலையில், சிபிஎம் தலை வர்கள் ராஜா ரெட்டி, பி.ஜி.மூர்த்தி, எம்.எம்.ராஜு,அனுமந்தராஜ், முனி வெங்கட்ப்பா, நாராயணசாமி, வெங்க டேஷ் ரெட்டி, அகிலா, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, எம்.ஜி.நாகேஷ் பாபு, ஆர்.கே.தேவராஜ் உட்பட 33 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த போராட்டத் தில் கலந்து கொள்ளாத தலைவர்கள் சிலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசார ணைக்கு 2024 நவ.22 அன்று நீதி மன்றத்தில் 33 பேரும் ஆஜராகினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் தலைவர்கள், காவல் துறைக்கு முறையாக தகவல் தெரி வித்தும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமையின்படியும் மக்கள்  நல கோரிக்கைகளுக்காக நடை பயணத்தை துவக்கினோம். காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்த நிலையில். உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைப் போல் நீதி மன்றத்திற்கு அழைத்திருப்பது சரி யான நடைமுறை இல்லை என்றும், தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற் காத சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்தி ருக்கும் காவல்துறையினர் மீது தமிழக அரசு, மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

சென்னை,நவ.22-  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை(நவ.23) உரு வாகக்கூடும். இதனிடையே  தென் மேற்கு வங்கக்கடல் பகுதி களில் உருவாக உள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் கார ணமாக, மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடி ப்பதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெள்ளியன்று (நவ.22) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, சனிக்கிழமை (நவ.23)  தென்கிழக்கு வங்க க்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசை யில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறக்கூடும்.

உதகையில் பனிப் பொழிவு: கடும் குளிரால் மக்கள் அவதி

உதகமண்டலம்,நவ.22- நீலகிரி மாவட்டம் உதகை யில் கடும் நீர் பனி கொட்டு வதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனி மற்றும் உரை பனி தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்த நிலை யில் தற்போது பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. வெள்ளியன்று உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டி யது. நீர் நிலைகள் அருகே உள்ள புல் தரை மைதா னங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம், போன்ற இடங்களில் நீர் பனி அதிக மாக காணப்பட்டது. அதே போல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன ங்கள் மீது நீர் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. நீர் பனி காரணமாக கடும் குளிர் நிலவுவதால் நெருப்பை மூட்டி உதகை பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர். உதகையில் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சி யஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 10 டிகிரி செல்சியதாகவும்