துரைப்பாக்கம் டிபி ஜெயின் கல்லூரியில், அரசு உதவி பெறும் துறைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். அந்தக் கல்லூரியை அரசு கையகப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (செப்.30) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.