districts

விஷம பேச்சால் மகாத்மா காந்தியை அவமானப்படுத்திய ஆளுநர் ரவி

சென்னை, ஜன. 23- சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளா கத்தில் செவ்வாயன்று (ஜன. 23) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய  அவர், ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தி யின் போராட்டம் பலன் அளிக்க வில்லை. நாம் சுதந்திரம் பெற்ற தற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம். நேதாஜி யின் இந்திய தேசிய படை ஆங்கி லேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பன மாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை என்று விஷம் கக்கினார். நேதாஜி பங்க ளிப்பு மிக முக்கியம் என்றாலும் அவரை பாராட்டுவதாக கூறிக்கொண்டு காந்தியடிகளை  இழிவு படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  வேலு நாச்சியார், வ.உ.சி. போன்ற வர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் இந்தியாவில் இருந்து வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறி யிருந்தார். இஸ்லாமிய தலை வர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது என்றும் அளுநர் கூறிக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும் கல்லூரி முதல்வர்  துறைசார் தலை வர்களுக்கு சுற்றிக்கை அனுப்பி யிருந்தார். இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், அதுமட்டுமல்ல. மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். என்றும் அப்போதுதான் இன்றைய நாளுக்கு வருகைப்பதிவு கொடுக்கப் படும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தினர்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவர்க ளுக்கு நான்கு மணிநேர ஆய்வக பயிற்சி இருந்துள்ளது. அதை விடுத்து அவர்கள் ஆளுநர் நிகழ்வில் கலந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாக மாண வர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழக துணைவேந்தர், “இதுவும் ஒரு கற்பித்தல்தான்” என்று சமாளித்தார். கட்டாயம் என அறிவிக்காவிடில் அவர்கள்  ஊர் சுற்று வெளியே சென்று விடுவார்கள் என்றும் எனவேதான் வருகை பதிவுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்று சொன்னதாகவும் அவர் கூறினார்.