ராணிப்பேட்டை, ஜூன் 25 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா தாலுகா, வேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று (ஜூன் 25) மாற்றுத்திறனாளி களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஒருங்கிணைப்பில் வேலம் ஒன்றிய குழுத்தலைவர் கலைக் குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டங்கள்) சித்ரா மற்றும் மாவட்ட இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கட்டுப் பாட்டின் கீழ் உள்ள சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டனர். மேலும், இம்முகாமில் காதொலி கருவி 6 நபர்களுக்கும், சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும் மொத்தம் 9 நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.