உலக விபத்து தினத்தை முன்னிட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளியன்று (அக். 17) நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவசர மருத்துவ சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பவானி, விபத்து பிரிவின் நோடல் அதிகாரி மருத்துவர் சத்தியப்பிரியா உள்ளிட்டோர் இதில் பேசினர்.