districts

img

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த அரசு ஊழியரின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், ஆர்.வெங்கடாஜலபதி, என்.கவியரசு, ஆர்.பொற்செழியன்,   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் டி.ரவிச்சந்திரன்,   ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  என்.காசிநாதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கருணாகரன், நில அளவைத்துறை  மாவட்ட தலைவர் ராஜ மகேந்திரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்ல. சுப்பிரமணியன்  ஆகியோர் பேசினர்.