திருவண்ணாமலை, நவ.19 - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழி யர் சங்க மாநாடு தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 15 ஆவது மாநாடு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சு. பார்த்திபன் தலைமை தாங்கினார். கோ. அண்ணாமலை அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் சி. சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ண மூர்த்தி, சாலை பணியாளர்கள் சங்க மாநிச் செயலாளர் மகாதேவன், மாநிலத் தலைவர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் பிரபு வேலை அறிக்கையும், பொருளாளர் ராஜா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் டானியல் ஜெய் சிங் நிறைவுறையாற்றினார். சம்பத் நன்றி கூறினார். தீர்மானங்கள் பள்ளி குழந்தை களுக்கு வழங்கப்படும் காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக்குழு தேர்வு திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக மா. பரிதிமாற் கலைஞன், மாவட்ட செயலாளராக க.பிரபு, பொரு ளாளராக ஜெ.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.