சென்னை, நவ. 23 - பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தென் சென்னை மாவட்ட 14ஆவது மாநாடு சனிக்கிழமை (நவ. 23) தேனாம்பேட்டையில் நடைபெற்றது. தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்தம், வெளி முகமை முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதிய த்தில் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும், புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர், செவிலியர்கள் உள்ளிட்டு தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணி யாற்றும் அனைவரையும் நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்டத் தலைவர் சி.கலைச்செல்வி மாநாட் டிற்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜா.வே.அருள் டேனியல் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத்தலைவர் து.அஸ் வினி கிரேஸ் ஜெயப்பிரியா வரவேற்றார். மாநிலச் செய லாளர் உ.சுமதி தொடக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் த.முத்துகுமார சாமிவேல் வேலை அறிக்கை யும், பொருளாளர் பெ.ஜெய ராமன் வரவு செலவு அறிக் கையும், அமைப்பாளர் இ.ரேணுகாதேவி மகளிர் துணைக்குழு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத்தின் தலை வர் எம்.ரமேஷ், அரசு ஊழி யர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி உள்ளிட்டு தோழமைச்சங் கத் தலைவர்கள் வாழ்த் துரை வழங்கினர். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.அன்பர சுவின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.டானி யல் ஜெயசிங் நிறைவுரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலாஜி பிரசாத் நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக ஆ.கோபிநாத், செயலாள ராக த.முத்துகுமாரசாமி வேல், பொருளாளராக பெ.ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.