திருப்பூர், செப்.26 - அகில இந்திய அரசு ஊழியர் சங் கங்கள் கூட்டமைப்பின் முடிவுப்படி தாராபுரம் மற்றும் உடுமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாராபுரம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிஎப்ஆர்டிஏ சட்டத்தை ரத்து செய்து என்பிஎஸ்சில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பித் தரு மாறு நிதி மேலாளர்களுக்கு உத்திரவி டவும், என்பிஎஸ் 95ன் கீழ் அனைத்து சந்தாதாரர்களையும் பயனளிப்பு ஓய்வூ திய முறைக்கு கொண்டு வரவேண்டும். ஒப்பந்த முறை, அயல்பணி மற்றும் தினக்கூலி நியமன முறையை ரத்து செய்து அந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப் படுத்த வேண்டும். பொதுத்துறை, அரசுத்துறை களை குறைப்பதை மற்றும் தனியார்ம யப்படுத்தப்படுவதை உடனே நிறுத்த வேண்டும், தேசியக் கல்விக் கொள் கையை கைவிட வேண்டும், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும் பப் பெற வேண்டும். மதச்சார் பின்மையை நிலை நிறுத்தவும். அனைத்து வகையான வகுப்புவாதங் களை எதிர்த்து போராட வேண்டும், கூட் டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை பாது காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப் பட்டன. வட்ட கிளைப் பொருளாளர் ப. ஆறுமுகம் தலைமை ஏற்றார். கோரிக் கைகளை விளக்கி வட்டக் கிளைச் செயலாளர் இல.தில்லையப்பன் உரை யாற்றினார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மத்திய செயற் குழு உறுப்பினர் கனகராஜ் வாழ்த்திப் பேசினார். மாவட்ட இணைச்செ யலாளர் எம்.மேகலிங்கம் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சு.சிவராசு நன்றி கூறினார். 15 பெண்கள் உள்பட மொத்தம் 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல உடுமலையில், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்ட கிளைத் தலைவர் ஜி.விவேகா ணந்தன் மற்றும் துணைத் தலைவர் ஜெ.எலிசபெத் ஆகியோர் தலைமை யில் உடுமலை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பி ரமணியன் பேசினார். தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் சிவக்குமார், தங்க பாண்டியன், கிராம உதவியாளர் சங்கம் பாலமுருகன், டி.புஷ்பா ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.