திருவள்ளூர், டிச.16- “பொன் இறால் 24” கருத்தரங்கு பொன்னேரியில் வெள்ளியன்று (டிச 14), நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான “பொன் இறால் 24” கருத்தரங்கு” வெள்ளியன்று (டிச 13), நடைபெற்றது. இறாலுக்கான ஏற்றுமதி சந்தைக்கும், உள்நாட்டு நுகர்வுக்கும் இடையே சமநிலையை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் பொன்னேரி கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று (டிச 13) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா. ஜெயசகீலா வரவேற்றார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் என். பெலிக்ஸ் இறால் ஏற்றுமதி மூலம் ஏற்படும் பொருளாதார நன்மைகளையும், உள்நாட்டு நுகர்வை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்படும் உணவு பாதுகாப்பு நன்மைகளையும் எடுத்துரைத்தார். இறால் ஏற்றுமதியால் ஏற்படும் நன்மைகள், இறால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான சந்தை விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி என்ற தலைப்பில் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கே.அழகுசுந்தரம், இந்தியாவில் உள்நாட்டு இறால் சந்தையை வளர்ப்பதற்கான வழிகள் என்ற தலைப்பில் இளஞ்சேரன், இந்தியாவில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான அரசு நடவடிக்கைகள் குறித்து கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஏ.ஜெயபால், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு இறால் சந்தையில் உள்ள சவால்கள் பற்றி முகமது ஆசிப் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை லாய்ட் கிரிஸ்பின் ஒருங்கிணைப்பில் அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜெயநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.