தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி ஒருவார காலம் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி வியாழனன்று (செப்.21) சென்னை சாஸ்திரி நகரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், செயலாளர்கள் ஏழுமலை, கோபிநாதன், செல்வராணி, முன்னாள் பொதுச் செயலாளர் சுகுமார், சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.