சென்னை, ஜன.31- சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவ நடை முறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் உறுதியாக செயல்பட்டதற்காக தங்க முத்திரை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச கூட்டு ஆணையம் (ஜேசிஐ) இதனை வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ள உலகில் முதல் மருத்துவமனை காவேரி மருத்துவமனை என்று நிர்வாக இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார். ஜே.சி.ஐ அங்கீகாரம், சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவதற்கான உலகளாவிய அளவுகோலாக பரவலாகக் கருதப்படுகிறது. நோயாளிகள் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நிறுவன செயல்திறன் ஆகியவற்றில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒப்புதல் தங்க முத்திரை என்று மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி கூறினார்.