districts

img

தனக்கோட்டியம்மாள் தோட்டம் மக்களுக்கு பட்டா வழங்குக

தனக்கோட்டியம்மாள் தோட்டம் மக்களுக்கு பட்டா வழங்குக சிபிஎம் தி.நகர் மாநாடு கோரிக்கை சென்னை, அக். 6 - 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் முத்துரெட்டி தோட்டம், தனக்கோட்டியம்மாள் தோட்டம், ராஜூபிள்ளை தோட்டம் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்; குடியிருப்புகளுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் தி.நகர் பகுதி 11வது மாநாடு ஞாயிறன்று (அக்.6) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அரசு - தனியார் நிலங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், 130வது வட்டத்தில் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும், உஸ்மான் சாலை மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், வடபழனி கோவில் அருகே அகற்றப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும், ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களையும் எல்லா நாளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை கிளைச் செயலாளர் கோ.ராசய்யா ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் ஏ.தென்னரசு வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் ஜி.ரவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் துவக்கவுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் இ.மூர்த்தியும், வரவு,  செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் எம்.குமாரும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அசோகன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு தேர்வு 9பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக எம்.குமார் தேர்வு செய்யப்பட்டார்.